ஓட்டுநர்களுக்கிடையே முற்றிய வாக்குவாதம்... பரபரப்பான பேருந்து நிலையம்

x

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில், பேருந்து ஓட்டுநர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விருத்தாச்சலத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்ல தயாரான பேருந்தை மறித்து, தொழிற்சங்க அமைப்பின் உறுப்பினரும், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநருமான பொன்னிவளவன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், பேருந்தில் அமர்ந்திருந்த ஓட்டுநர் மணிவண்ணனுக்கும், பொன்னிவளவனுக்குமிடையே தகராறு முற்றிய நிலையில் பேருந்துநிலையம் பரபரப்பானது. இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார், சாமாதான பேச்சுவார்த்தை நடத்திய பின்பு இருவரும் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்