"குடிச்சிட்டு பைக் ஓட்டுனா... கேஸ் போடுவியா.." - "எவனும் போகமுடியாது.."ஊரையே அலற விட்ட குடிமகன்

x

கடலூர் மாவட்டம் திட்டகுடி அருகே, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததால், சாலையில் கட்டைகளை போட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுபோதையில் இருந்த ஜெயக்குமார் என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, காலையில் வந்து எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அங்கிருந்து வெளியேறிய அவர், சாலையில் கட்டைகளை போட்டு, நாற்காலியில் அமர்ந்து கொண்டு வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்