நடுவழியில் குழந்தைகளுடன் இறக்கி விடப்பட்ட பெண்...ஆத்திரத்தில் பேருந்தை மறித்து நடத்துனரை சுத்துப்போட்ட மக்கள்

x

ஆரணி அருகே அரசு பேருந்தில் இருந்து பெண்ணை இறக்கி விட்ட விவகாரத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாழப்பந்தலை சேர்ந்த ஜெயப்பிரியா என்பவர் குழந்தைகளுடன், ஆரணியிலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, பயணிகள் அனைவரும் மேல்புதுப்பாக்கம் கிராமத்தில் இறங்கியதால், பேருந்து நடத்துனர், ஜெயப்பிரியாவை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு நடந்து செல்லுமாறு கூறி உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த வாழப்பந்தல் மக்கள், மீண்டும் ஊருக்குள் வந்த பேருந்தை சிறைபிடித்தனர். இந்நிலையில், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்