வெள்ளத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தை... களமிறங்கிய தீயணைப்பு வீரர்கள் - பரபரப்பு காட்சிகள்

x

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வெள்ளத்தால் சிக்கி தவித்த இருளர் சமூக மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கணபதிபுரம் பகுதியில் கசக்கால்வாய் ஓரம் 20-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அங்கிருந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காய்வாயின் இடையே கயிறு கட்டி அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்