நெருங்கும் மகர விளக்கு பூஜை, சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு

x

சபரிமலையில் மகரஜோதி பெருவிழா ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகரஜோதி பெருவிழாவுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் பம்பை மற்றும் புல்மேட்டில் நடைபெற்ற விபத்துக்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஜோதி தெரியும் இடங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜோதி தரிசனத்திற்காக மலையில் தங்கும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

ஜோதி முடிந்த பின்னர் பக்தர்கள் திரும்புவதற்கு ஆயிரம் பேருந்துகள் தயாராகி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்