பாம்பனில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பயணிகளுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்துகள்

x

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரையை நோக்கி சென்ற அரசு பேருந்தும், திருப்பத்தூரில் இருந்து ராமேஸ்வரம் வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மழையின் காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஓட்டுநர் பலத்த காயமடைந்த நிலையில், 15க்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்