எல்ஐசி வெளியிட்ட அறிவிப்பு

x

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழாக, ரயில்வே, காவல் துறை அல்லது மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்படும் சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று எல்ஐசி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எல்ஐசி தலைவர் சித்தார்த் மொஹந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசாவில் நடந்த துயரமான ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க எல்ஐசி உறுதி பூண்டுள்ளது என்று கூறியுள்ளார். நிதி நிவாரணம் வழங்குவதற்கு உரிமை கோரல் தீர்வுகளை எல்ஐசி விரைவுபடுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்