“அண்ணன் எடப்பாடி...“ - மனம் திறந்த அண்ணாமலை

x

தமிழகத்தில் அ.தி.மு.க பெரிய கட்சி என்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக பிரதமர்தான் இருப்பதாக, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 வது வார உரையின் ஒளிபரப்பை, அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சென்னை, நடுக்குப்பத்தில் பார்வையிட்டனர். தமிழ்நாடு குறித்து பிரதமர் பேசியது புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை எடப்பாடி பழனிசாமியும், தானும் பாஜக தேசிய தலைமையிடம் முன்வைத்ததாகவும், அது நடக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. தொடர்ந்து போராடும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்