"நாம் இந்தியர்... அண்ணன் தம்பியாக பார்க்க வேண்டும்" - இப்தார் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேச்சு

x

நாம் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக பிரிந்திருந்தாலும், இந்தியர் என்ற உணர்வில் இணைந்து உள்ளோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் தமிழக பாஜக சிறுபான்மை அணி சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட அண்ணாமலை, நாம் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்தியர் என்ற உணர்வில் இணைந்துள்ளோம் என்றும், ஒவ்வொரு மதத்தினரும், மற்ற மதத்தினரை அண்ணன் தம்பியாக பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்