"அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்" - காயத்ரி ரகுராம்

x

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி காயத்திரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார்.

தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் அண்ணாமலையுடன் நேருக்குநேர் விவாதம் நடத்த விரும்புகிறேன், தைரியமாக அதனை எதிர்கொள்ள அண்ணாமலை தயாரா என காயத்திரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்