சிறுவர்கள் விளையாடும் ரூபாய் நோட்டை கடையில் கொடுத்து ரகளை - போதையில் Thug செய்த முதியவர்

x

கன்னியாகுமரி அருகே டீக்கடையில், சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து, ரகளையில் ஈடுபட்ட முதியவரால் பரபரப்பு நிலவியது. தக்கலை அருகே முந்திரி தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றுபவர் ஜேம்ஸ். முதியவரான இவர், பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள டீக்கடைக்கு சென்று, சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த ரூபாய் நோட்டு போலியானது என டீக்கடைக்கரார் கூறிய போது, மது போதையில் இருந்த அவர், அதனை ஏற்றுக் கொள்ளாமல் ரகளை செய்துள்ளார். இதனால், அப்பகுதி சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்