வாட்ஸ்-அப் மூலம் ஏற்பட்ட நட்பால் விபரீதம்...இளம்பெண்ணை ஏமாற்றிய என்ஜினீயர்

x

சின்ன சேலத்தை அடுத்த பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த லதா என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த தாமோதரன் என்கிற ரவிக்குமாருக்கும் முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

2 குழந்தைகளுக்கு தாயான லதாவிடம், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக தாமோதரன் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பிய லதா, அவரை புகைப்படம் எடுப்பதற்காக தனது வீட்டுக்கு வரவழைதுள்ளார்.

வீட்டில் லதா உடை மாற்றுவதற்கு வேறு அறைக்குச் சென்ற நேரத்தில், பீரோவில் இருந்த 8 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தாமோதரன் தப்பிச் சென்றுள்ளார்.

லதா வெளியே வந்து பார்த்தபோது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், காரைக்குடியில் தலைமறைவாக இருந்த தாமோதரனை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்