அரசு பேருந்து ஓட்டுநரின் மண்டையை உடைத்த ஆட்டோ டிரைவர்... அண்ணா பேருந்து நிலையத்தில் பரபரப்பு

x

காஞ்சிபுரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோ நிறுத்தப்பட்டத்தை தட்டி கேட்ட, பேருந்து ஒட்டுநரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுவது வழக்கமாகி வருகிறது.

இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று வெளியே வந்த போது, ஆட்டோ ஒன்று இடையூறாக நின்றுள்ளது.

அதை பார்த்த பேருந்து ஓட்டுநர் சுரேஷ், ஆட்டோவை அப்புறப்படுத்தி வழிவிடும் படி கூறியுள்ளார்.

அதனால், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் தீபக், பேருந்து ஒட்டுநரை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

அதில் படுகாயமடைந்த ஒட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை சாலையில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டதை அடுத்து, அங்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநர் தீபக்கும் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்