மதுபோதையில் சாலையை மறித்த நபரால் இளைஞருக்கு நடந்த விபரீதம்

x
  • புதுச்சேரியில், மோனிஷா என்ற பெண் பிறந்தநாளையொட்டி, தனது கணவர் மற்றும் அவரது நண்பர்களுக்கு லப்போர்த்தனே பகுதியில் மது விருந்து கொடுத்துள்ளார்.
  • மோனிஷாவை தவிர மற்றவர்கள் மதுபோதையில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, முத்துப்பிள்ளை பாளையத்தை சேர்ந்த விஷால் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார்.
  • அப்போது, மதுபோதையில் இருந்த முகேஷ் என்பவர், சாலையின் குறுக்கே நின்றபடி பைக்கில் வேகமாக வந்த விஷாலை தாக்க முயன்றுள்ளார்.
  • அப்போது நிலைதடுமாறி, அருகில் இருந்த மரத்தின் மீது விஷாலின் இருசக்கர வாகனம் மோதியது.
  • இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், மோனிஷா, முகேஷ் தவிர மற்ற 5 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்