பல ஆயிரம் அடி ஆழத்தில் நிகழ்ந்த விபத்து... எடுக்க எடுக்க வரும் உடல்கள் - பெருவை உலுக்கிப் போட்ட சுரங்க விபத்து

x

பெரு நாட்டில், உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்நாட்டில் உள்ள அரேக்யூபா நகரம் அருகே செயல்பட்டு வரும் தங்க சுரங்கத்தில், ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அந்த சுரங்கத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், தொழிலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 27 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்