பச்சிளங்குழந்தை உட்பட 17 பேர் பலி... அமெரிக்காவை அச்சுறுத்தும்... - தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

x
  • அமெரிக்காவில் குடியரசுத் தலைவர்கள் தினத்தன்று நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பச்சிளங்குழந்தை, பாதிரியார் உட்பட 17 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • சிகாகோ நகரில் சாலையில் காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பச்சிளங்குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர்.
  • நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் ஊர்வலத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும், மிசிசிப்பி மாகாணத்தில் 4 இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
  • நியூஜெர்சி மாகாணத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சுட்டுக் கொன்று கணவனும் தற்கொலை செய்து கொண்டார்.
  • டென்னிசியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் திருட்டு சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற காவலரை 18 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
  • அதேபோல் லாஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியாரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியான நிலையில், சந்தேகத்திற்குரிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்