கோயில் திருவிழா... ஸ்தம்பித்த சாலை... 5 கி.மீ. தூரத்திற்கு வரிசைகட்டி நின்ற வாகனங்கள்.. 3 மணி நேரம் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்

x
  • அரூர் அருகே கோயில் தேர்த் திருவிழா காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், ஆம்புலன்ஸ் ஒன்று 3 மணி நேரம் சிக்கி தவித்தது.
  • தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில், தேர்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்க பக்தர்கள் குவிந்ததால், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  • இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கிக்கொண்ட நிலையில், பொதுமக்கள் சுமார் 3 மணி நேரம் போராடி போக்குவரத்தை சரி செய்து, ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே நெரிசலுக்கு காரணம் என பக்தர்கள் குற்றஞ்சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்