அம்பை பல் பிடுங்கிய விவகாரம்... "அறிக்கையை தரமறுக்கும் மருத்துவமனை.."- பாதிக்கப்பட்டவரின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு

x

நெல்லையில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டவர்களின் பல்லை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், கடந்த மாதம் 10 ஆம் தேதி விகேபுரம் காவல்நிலையத்தில் அருண்குமார் மற்றும் அவரது 17 வயது சகோதரரின் பற்கள் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனை அறிக்கையை கேட்டு சகோதரர்களின் தாய் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆர்டிஐ மூலம் மனு அளித்துள்ளார். இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிப்படி 48 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்ற நிலையில், தகவல்களை தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்