அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு - தமிழக அரசு சொன்ன தகவல்

x

சென்னை மெட்ரோ ரயில் முதலாவது கட்ட திட்டத்துக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்ததில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2010-ஆம் ஆண்டு, சென்னை மெட்ரோ இரயில், முதலாவது கட்ட திட்டத்துக்கு தளவாடங்களை கொள்முதல் செய்ய அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், அப்போதைய அரசுக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டுகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், டெண்டர் முறையாக நடைபெற்றதால் தமிழக அரசுக்கு 250 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்