3 வேளை தடபுடல் அசைவ விருந்து.. இனி எல்லாமே இலவசம் தான்.. ஊரே கொண்டாடும் ஊராட்சி தலைவர்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தாஸ். இவர், பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தனது பகுதிமக்களுக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்தார். அதன்படி, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மூன்று வேளையும் சைவ, அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், அப்பகுதி மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்த சித்ராதாஸ், ஊராட்சியில் பணம் செலுத்தி வீடு வீடாக இலவசமாக வீட்டு வரி ரசீதையும் கொடுத்து அசத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்