ஒட்டுமொத்தமாக ஆய்வுக்கு வந்த அமைச்சர்கள், ஆணையர், மேயர்..

x

சென்னை பெரம்பூர் ஸ்டீபன்சன் சாலையில், உயர்மட்ட மேம்பாலத்தை, முதலமைச்சர் இன்று மாலை திறந்து வைக்கும் நிலையில், அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ஸ்டீபன்சன் சாலையில், ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு மேல் செல்லும் வகையில், 824 மீட்டர் நீளத்தில், 66 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். இந்நிலையில், அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்