ஓரே அடியாக பாட்டிலை உடைத்து சீறிப்பாய்ந்த பாய்ந்த இளைஞர்... டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் - பரபரப்பு வீடியோ காட்சிகள்

x

வேடசந்தூரில் மதுபானம் சரி இல்லை என கூறி இளைஞர் ஒருவர் மதுக்கடை ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நண்பர்களுடன் மது அருந்த வந்த பிரவீன் என்பவர், வாங்கிய மதுபானம் சரியில்லை என கூறி கடை ஊழியருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து தகராறு முற்றவே கடை ஊழியர் பாலமுருகனை, இளைஞர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் கடையின் சிசிடிவி கேமிராவை உடைத்து இளைஞர் தப்பி சென்ற நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்