மாண்டஸ் புயலால் விமான சேவைக்கு ஏற்பட்ட சிக்கல்

x

மாண்டஸ் புயல் எதிரொலியாக விமானங்களை தரையிறக்க ஐதராபாத், பெங்களூரூ விமான நிலையங்களில் கூடுதல் நடைமேடை ஒதுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், பிற கட்டிடங்களில் நீர் உட்புகுந்தால் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ள நீரை வெளியேற்ற தேவையான மோட்டார் பம்புகள் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள வடி கால்வாய்களில் அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும்,மோசமான வானிலை காரணமாக சென்னையில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டால் பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்