ஆக்ரோஷம் காட்டிய காட்டு யானை - பரபரப்பு வீடியோ காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை, வனத்துறையினரின் வாகனத்தை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மழவன் சேரம்பாடி கிராமத்தில் நுழைந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்துவதற்காக, வாகனம் மூலம் வனத்துறையினர் யானையைப் பின் தொடர்ந்தனர். அப்போது, அந்த யானை வனத்துறையினரின் வாகனத்தை ஆக்ரோஷமாக தாக்க முயன்ற நிலையில், இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்