ஆக்ரோஷமாக சீறும் கடல்.. 5 அடிக்கு மேல் அலை.. அச்சத்தில் காசிமேடு மக்கள்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக, காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
காற்றின் வேகம் வழக்கத்தை விட சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.
ஆக்ரோஷமாக, 5 அடிக்கு மேல் எழும் கடல் அலைகள், தடுப்பு கற்களை தாண்டி உட்புகுந்துவரும் நிலையில், தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story