தலைக்கு மேல் பறந்து மிரட்டும் விமானங்கள்.. வீடுகள் இடிந்து விடுமென இரவு பகலாய் உறக்கம் இன்றி உயிர் பயத்தில் கதறும் மக்கள்

தலைக்கு மேல் பறந்து மிரட்டும் விமானங்கள்.. வீடுகள் இடிந்து விடுமென இரவு பகலாய் உறக்கம் இன்றி உயிர் பயத்தில் கதறும் மக்கள்
x


சென்னை விமான நிலையம், கொளப்பாக்கம் வரை பரவி இருக்கும் நிலையில் விமான ஓடுதளம் அடையார் ஆற்றை தடுத்து பாலத்தின் மேலே கட்டப்பட்டுள்ளது.

அந்த ஓடுதளம் பலவீனமாக இருக்கவே, இரண்டாவது ஓடுதளம் அமைத்து விமானம் தரையிறங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டாவது ஓடுதளத்தில் விமானம் தரையிறங்கும்போது அங்கே இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு நெருக்கமாக கடந்து போவதாகவும் இந்த தடைகளை சரி செய்ய அங்கே உள்ள

146 -க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உயரங்களை 5மீட்டர் முதல் 9 மீட்டர் வரை அவ்வீடுகளின் உயரங்களை குறைக்க சொல்லி விமான நிலைய அதிகாரிகளால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து கொளப்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் அப்பகுதி மக்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்