அன்னையர் தினத்தில் பெண் குழந்தையை தத்தெடுத்து தாயான 'விருமாண்டி' நடிகை அபிராமி

x

பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளதாகவும், அன்னையர் தினத்தை தாயாக கொண்டாடுவதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் நடிகை அபிராமி தெரிவித்துள்ளார். நடிகை அபிராமி - ராகுல் பவன் தம்பதிக்கு 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த ஆண்டு கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தனர். இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை அபிராமி, மகளின் வருகைக்கு பிறகு வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும், இந்த அன்னையர் தினத்தை ஒரு தாயாக கொண்டாடுவதில் பாக்கியசாலியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்