துக்க நிகழ்ச்சியில் மேளம் அடிக்க சென்றபோது கோர விபத்து..3 பேர் துடிதுடித்து பலி - திருப்பத்தூரில் அதிர்ச்சி

x

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆட்டோவும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பெரியகரம் பகுதியை சேர்ந்த 10 இளைஞர்கள், கோத்தலக்கோட்டை திருவிழாவில் மேளமடித்து விட்டு, துக்க நிகழ்ச்சி ஒன்றில் மேளமடிப்பதற்காக கந்திலி வழியாக ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்தும், ஷேர் ஆட்டோவும் நேருக்கு நோர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சாரதி மற்றும் சந்திரபுரம் பகுதியைச் சார்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெரியகரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்