சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது மோதிய லாரி - தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்

x

கேரளாவில் சிக்னலில் காத்திருந்த வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதியதில், 4 கார்கள் உட்பட 7 வாகனங்கள் சேதமடைந்தன. திருச்சூர் புதுக்காடு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சிக்னலில் வாகனங்கள் காத்திருந்த போது பெரும்பாவூரிலிருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி வாகனங்கள் மீது மோதியது. இதில் 4 கார்கள், இரு பைக்குகள், ஒரு டம்போ என 7 வாகனங்கள் சேதமடைந்தன. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து டிப்பர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்த நிலையில், ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்