ஏசி வெடித்து சிதறி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

x

கிண்டியில் ஏசி பழுது பார்க்கும் போது வாயு கசிந்து வெடித்ததில் தீக்காயமடைந்த இருவர் உயிரிழந்தனர். சென்னை கிண்டி அம்பேத்கார் நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஏசி பழுதடைந்துள்ளது. இதனையொட்டி ஏசி மெக்கானிக்குகளான சின்னதுரை, இந்திரகுமார், சரவணன் ஆகியோர் அந்த நிறுவனத்திற்கு சென்று, அவுட்டோர் கம்ப்ரசர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏசியில் இருந்து வாயு கசிந்து வெடித்துள்ளது. இதில் தீக்காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சின்னதுரையும், இந்திரகுமாரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்