யானைகஜம் அருவியில் குளித்த இளைஞர்... பாறையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு

x

தேனி மாவட்டத்தில், யானைகஜம் அருவியில் குளித்த இளைஞர், பாறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.

அருண் பாண்டி என்பவர், நண்பர்களுடன் யானைகஜம் அருவியில் குளிப்பதற்காக வந்துள்ளார்.

அருவியில் பாறையில் ஏறி குளித்து கொண்டிருந்த போது, அருண் பாண்டி பாறையில் இருந்து வழுக்கி விழுந்துள்ளார்.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த அருண் பாண்டிக்கு திருமணமாகி ஒருமாதமே ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்