தொடர்ந்து 7 மணி நேரம் பம்பை அடித்து உலக சாதனை படைத்த இளைஞர்

x

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், பம்பையை 7 மணி நேரம் அடித்து இளைஞர் ஒருவர் உலக சாதனை புரிந்துள்ளார்.

பாலக்கோடு நகர் பகுதியை சேர்ந்த சற்குணம் 6வது தலைமுறையாக பம்பை வாசிக்கும் பணியில் 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர், 7 மணி நேரம் நிறுத்தாமல் பம்பை வாசித்து சாதனை படைத்துள்ளார்.

இதை அங்கீகரித்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு சான்றிதழ் வழங்கிய நிலையில், அதை சற்குணம் தந்தையிடம் வழங்கி ஆசி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்