பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு...கீழே விழுந்து படுகாயம் - விற்க சென்ற திருடர்களுக்கு நடந்த சம்பவம்

x

கன்னியாகுமரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 7 சவரன் நகைகளை பறித்த கொள்ளையர்களை, அதை விற்க சென்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே சுனிதா என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் சுனிதாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் நகைகளை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், கீழே விழுந்து காயமடைந்த சுனிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், திருடிய நகைகளை நாகர்கோவிலில் விற்க சென்ற கொள்ளையர்கள் மூவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்