"நானும் தாலி கட்டுறேன் பாத்துக்கோங்க..." - தாலியை தூக்கி காண்பித்த ஜெர்மன் மாப்பிள்ளை

x

சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஜெர்மனியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.சென்னையை சேர்ந்த ஹர்ஷிதா, ஜெர்மனிக்கு படிக்கச் சென்றபோது, அந்த நாட்டை சேர்ந்த டேவிட் ஹான்சயில்ட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நண்பர்களாக பழகி வந்த நிலையில், நாளடைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்களின் இரு வீட்டாரின் பெற்றோர் சம்மதித்த நிலையில், நேற்று முன்தினம் ஜெர்மன் நாட்டு முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இன்று தமிழக கலாச்சாரப்படி வேத மந்திரங்கள் முழங்க, ஹர்ஷிதாவுக்கு டேவிட் ஹான்சயில் தாலி கட்டி மனைவியாக ஏற்று கொண்டார். இந்த திருமணத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த உறவினர்கள் வேட்டி சட்டை, புடவை என தமிழக பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்த நண்பர்கள் தமிழக கலாச்சாரமான மண்பாண்டங்களான பொருட்களை திருமண பரிசாக வழங்கி அசத்தினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்