"அப்பாவ விட்டுருடா" என தந்தை காலில் விழுந்து கெஞ்சியும் துடிக்க துடிக்க அடித்த மகன்

x

கடலூரில் மகன் ஒருவர் சொத்துக்காக வயதான தன் தந்தையை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முஷ்ணம் அருகே வட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராதாகிருஷ்ணண் ஆரம்ப காலகட்டத்தில் தன் சொத்துகளை இரண்டு மகன்களுக்கும் சமமாக பிரித்து கொடுத்து விட்டு, தன்னுடைய கடைசி காலத்திற்காக ஒரு சிறு சொத்தை மட்டும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருடைய மகன் ஜாக்சன்துரை ராதாகிருஷ்ணன் வைத்திருக்கும் சிறு சொத்தையும் தனக்கு தரும்படி சில நாட்களாக தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர் தர மறுக்கவே ஆத்திரமடைந்த ஜாக்சன் துரை உறவினர் ஒருவருடன் வந்து சாலையில் தனது தந்தையை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். முதியவரான ராதாகிருஷ்ணன் சாலையில் வலியால் கத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஜாக்சன் துரையை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்