முந்தி செல்ல முயன்ற வேன்.. அநியாயமாக பறிபோன உயிர்.. கார் கேமராவில் பதிவான காட்சிகள்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற வேன், எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தின் காட்சிகள் வெளியாகி உள்ளது. திருவேங்கடம்-பருவக்குடி செல்லும் சாலையில், தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு, வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற வாகனத்தை வேன் முந்த முயன்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு, அதில் வந்த ரெங்கசாமி என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்தின் காட்சிகள் பின்னால் வந்த கார் கேமராவில் பதிவாகியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்