சாப்பிட சென்ற நேரத்தில் 300 சிலிண்டர்களோடு காணாமல் போன லாரி | thirunelveli | thanthi tv

x

திருநெல்வேலி கேடிசி நகரில், 300 சிலிண்டர்களுடன் நின்றிருந்த லாரி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர், லாரி வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் நிலையில், அவரது லாரியில் ஐந்து லட்சம் மதிப்பிலான 300 சிலிண்டர்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் லாரியை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் உணவருந்த சென்றதாக தெரிகிறது. பின்னர் லாரி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனியார் நிறுவனத்திடம் செல்லத்துரை வாகன கடன் வாங்கியதாகவும், தவணைத் தொகையை முறையாக செலுத்தாததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் லாரியை பறிமுதல் செய்ததும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்