தலைமை ஆசிரியரின் தந்த தண்டனையால் விபரீதம்.. தாயின் மடியிலேயே துடிதுடித்து உயிரைவிட்ட மாணவன்..!

நெஞ்சு வலிப்பதாக கூறிய 9 வயது சிறுவன் ஒருவன், தாயின் மடியிலேயே உயிரை விட்ட சோகம் வேலூரில் அரங்கேறியுள்ளது.
x

வேலூர் அணைக்கட்டுப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, தலைமை ஆசிரியர் ஒருவர் மைதானத்தில் 4 ரவுண்டு ஓடும்படி கூறியதாக தெரிகிறது. இதில் மாணவர் மோகன்ராஜ் உட்பட சிலர் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மோகன் ராஜை அவரது பெற்றோர் சந்தித்துள்ளனர். அப்பொழுது மாணவன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளார். அடுத்த 10 நிமிடத்திலே தாயின் மடியிலேயே மாணவன் மோகன் ராஜ் உயிரிழந்தார். தொடர்ந்து சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்