ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... விண்ணை முட்டிய கரும்புகையால் பரபரப்பு

x

குஜராத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அங்கிருந்த பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின. வதோதரா பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நள்ளிரவில் தீப்பற்றியது. தொழிற்சாலையில் இருந்த ரசாயன பொருட்கள் கொளுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியில் புகைமண்டலம் சூழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்