பனிமூட்டத்தால் நிகழ்ந்த பயங்கர விபத்து.. கோவில் மீது மோதிய பயிற்சி விமானம் - பைலட் பலி, ஒருவர் படுகாயம்!

x

பனிமூட்டத்தால் நிகழ்ந்த பயங்கர விபத்து.. கோவில் மீது மோதிய பயிற்சி விமானம் - பைலட் பலி, ஒருவர் படுகாயம்!

மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். உம்ரி கிராமத்தில் உள்ள கோவிலின் மீது விமானம் மோதி விபத்திற்குள்ளானது. அதில் விமானி மற்றும் பயிற்சியாளர் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விமானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பனிமூட்டம் காரணமாக விமானம் விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்