மணமேடைக்கு காத்திருந்த புது மாப்பிள்ளை திடீரென நேர்ந்த சோகம்.. கண்கலங்க வைத்த சம்பவம்

x

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த ராஜ் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதற்காக, தான் பணிபுரியும் கல்லூரியின் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு டூவிலரில் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி ராஜ் படுகாயமடைந்தார்.

தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜ், மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த ராஜின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர்.

அவருடைய இரண்டு கண்கள், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு இதயவால்வுகள் மற்றும் ஒரு கல்லீரல் ஆகிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில், 7 பேரின் உயிர் பாதுகாக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்