பள்ளிக்கு வந்த மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு | வெளியான திடுக் தகவல்..

x

விழுப்புரம் அருகேயுள்ள மல்லிகைபட்டு கிராமத்தை சார்ந்த அஸ்வினி என்ற 12 ஆம் வகுப்பு மாணவியின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவரவே கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பள்ளி மாணவி இன்று வீட்டில் பூச்சி மருந்து அருந்திவிட்டு வந்து மாம்பழபட்டு அரசு மேல்நிலைபள்ளிக்கு வருகை புரிந்துள்ளார்.

பள்ளியில் மாணவி மயங்கி விழுந்ததை அடுத்து மாணவியை மீட்டு ஆசிரியர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காணை போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்