25 நாடுகளை அலற விட்ட சென்னை மாணவர்

x

ஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில், 2 தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற இப்போட்டியில், 25 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட, சென்னை நங்கநல்லூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் ஆதர்ஷ், 90 கிலோ எடைப்பிரிவு போட்டியில் 2 தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளார். இந்நிலையில், சென்னை திரும்பிய ஆதர்ஷுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்