வீடியோ-க்கு ஆசை பட்டு அருவியில் பறிபோன மாணவன் உயிர் - குலைநடுங்கவைக்கும் காட்சி

x

திருப்பதி அருகே, தலகோணா அருவியில் பாறையின் அடியில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்தார். திருப்பதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர், தலகோணா அருவியில் குளிக்கச் சென்றனர். அப்போது, வீடியோ எடுப்பதற்காக சுமந்த் என்ற மாணவன், அருவியில் இருந்து கீழே குதித்ததாக தெரிகிறது. வெகு நேரம் ஆகியும் சுமந்த் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த போலீசார், மீட்பு குழுவினர் உதவியுடன் பாறையின் அடியில் சிக்கி உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்