தந்தை இறந்த சோகத்தில் தேர்வு எழுதிய மாணவி - வெற்றி பெற்று கண்ணீரோடு வேதனை...!!

x

அண்ணாநகர் தாசர்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். பெயிண்டர் வேலை செய்து வந்த இவரது மூன்றாவது மகள் திலகா, அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வின்போது இவரது தந்தை முருகதாஸ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தந்தையின் உடலை வீட்டில் வைத்துவிட்டு, கனத்த இதயத்துடன் மாணவி திலகா தேர்வு எழுதினார். இந்நிலையில், மாணவி திலகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 428 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் 2ம் இடம் பிடித்துள்ளார். இது தொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டி அளித்த திலகா, வினாத்தாளை தொட்டவுடன் தந்தையின் நினைவு தான் வந்தது என உருக்கமாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்