கட்டிய மனைவியுடன் வாழாமல் மாமியாருடன் "வாழ்ந்த" மருமகன் - கொடூர நரகத்தை காட்டிய மைத்துனர்

x

நாகையில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, தாயுடன் தகாத உறவில் இருந்ததால் மகன் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.நாகப்பட்டினம் காடம்பாடியை சேர்ந்த கலியபெருமாள், கடந்த 17 ஆம் தேதி வெளிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவருடைய கழுத்தில் கத்தி குத்து காயங்கள் இருந்ததால், கலியபெருமாளின் மைத்துனர் சூரிய கிருபா எனபவரை பிடித்து விசாரித்தனர். அவர் தனது தாயுடன் தகாத உறவு வைத்து இருந்ததால் கொலை செய்ததாக சூரியகிருபா தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, கலியபெருமாளுக்கும் சூரிய கிருபாவின் அக்காவுக்கும் திருமணமான நிலையில், தினமும் குடித்துவிட்டு அக்காவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும், தனது தாயுடன் தகாத உறவில் இருந்ததை பார்த்த சூரிய கிருபா கலியபெருமாளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த அவரை, உறவினர் கார்த்திக்குடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்து உடலை ரெயில்வே தண்டவாளத்தில் வீசியுள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நாகை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்