தேனி மாவட்டத்தையே பரபரப்பாக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்த ஒரேயொரு பேனர்..!

x

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், ஓ. பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி குனிந்து வணங்குவது போல் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில், நாளை ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவாளர்கள் பிளக்ஸ் பேனர்களை வைத்து வருகின்றனர். அதன்படி, பெரியகுளத்தில் வைக்கப்பட்ட பேனரில், ஓ. பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி குனிந்து வணங்குவது போன்ற படம் இடம் பெற்றது. இதை அகற்ற வேண்டும் என கோரி, வடகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஓபிஎஸ் ஆதரவாளர்களை வைத்து அந்த பேனரை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்