கழுத்தில் கத்தியால் வெட்டி மர்மநபர்கள் வழிப்பறி - உயிருக்கு போராடும் கறிக்கடைகாரர்

x

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சையது யாசர் என்பவர், ஆதாம் மார்க்கெட்டில் கறிக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சையது யாசர் வால்டாக்ஸ் சாலை சுரங்கப்பாதை அருகே சென்றிருக்கிறார்.

அப்போது அடையாளம் தெரியாத இரண்டு பேர், டூவீலரில் வந்து அவரிடம் செல்போன், பணத்தை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அவர்கள் பட்டன் கத்தியால் கழுத்தில் வெட்டியதில் படுகாயம் அடைந்த சையது யாசர், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பியோடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்