ஐஏஎஸ் அதிகாரி போல் நடித்து மோசடி - சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சென்னையை சேர்ந்த சுபாஷ் என்பவர், ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாக போலீசார்க்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், திருவண்ணாமலையில் உள்ள விடுதியில் சோதனை நடத்திய போலீசார், சுபாஷ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து செய்தனர்.

விசாரணையில், அரசு அதிகாரிகளை போல் அடையாள அட்டைகள் மற்றும் விசிட்டிங் கார்டுகளை சுபாஷிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

இதனிடையே, ஐஏஸ், டிஆர்ஓ மற்றும் சுகாதர ஆய்வாளார் போன்ற அரசு அதிகாரிகளாக பலருக்கு வேலைவாங்கி தருவதாக கூறி சுபாஷ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் லேப்டாப்பினை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்