தலைகீழாக கவிழ்ந்த தனியார் பேருந்து.. 20 பெண்களுக்கு நேர்ந்த பயங்கரம் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

x

காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் சென்ற மினி பேருந்து சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானதில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர்.

வல்லம் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தொழிற்சாலை பணியாளர்கள் மினி பேருந்தில் ஒரக்கடம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நிலைத்தடுமாறிய மினி பேருந்து சாலையின் தடுப்பில் மோதி தலைக்கீழாக கவிழ்ந்தது.

விபத்தில் மினி பேருந்தில் இருந்த பெண்கள் படுகாயமடைந்தனர்.

சாலை போக்குவரத்தை சரிசெய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்